தூக்கு தண்டனை: ஜெயலலிதா பேச்சுக்கு சுப்பிரமணிய சாமி ஆதரவு
மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்த அரசியலமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது சரி தான் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜிவ்காந்தி கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையில் யாரும் குறுக்கிடக் கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்தக் கூடாது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை இப்போது தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது சரி தான்.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15 க்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுத் தாக்கல் செய்வேன் என்று நான் கூறியதால் தான் 12 வருடமாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது.
தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன் , பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடும் முடிவில் இதற்கு மேலும் குறுக்கீடு இருக்க கூடாது.
மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்பு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications