கேரளாவுக்கு வைக்கோல் கொண்டு செல்லப்படுவதை தடுக்க மக்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Hay Ladden Lorry
நெல்லை: தமிழக அரசு அறிவித்துள்ள கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் வைக்கோலை அளவை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செங்கோட்டை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வைக்கோல் கொண்டு செல்லப்படுகிறது. அளவிற்கு அதிகமாக ஏற்றி செல்லப்படும் இந்த வைக்கோல் லாரியால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் தமிழகத்தில் உள்ள மாடுகளுக்கு பிரதான தீவனமாக வாங்கும் வைக்கோலும் இங்கு போதுமான அளவு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. நெல்லை மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வரும நிலையில் ஏராளமானோர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

ஏராளமானோர் மாடுகள் வைத்து பால் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள கறவை மாடுகள் வழங்கும் திட்டம் இப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது.

நடப்பாண்டில் 12 ஆயிரம் கறவை மாடுகள் வழங்க 56 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை தினம்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வைக்கோல் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதால் மாட்டு தீவனத்திற்கு தட்டுபாடு நிலவுகிறது.

இந்நிலையில் கறவை மாடுகள் திட்டம் சிறப்பாக செயல்பட எதுவாக செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு வைக்கோல் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+