டிடிஎச் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது! - கேபிள் ஆபரேட்டர் சங்கம்
சென்னை: அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தொடங்கியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. அதே நேரம் டிடிஎச் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் வெளிக் கொணரப்படுவது அளவிலா ஆனந்தத்தை தருகிறது. பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி.யை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முதல்வரின் முயற்சி பாராட்டுக்குரியது, வரவேற்கத்தக்கது.
இந்த மகிழ்ச்சிக்குரிய நேரத்தில் சில கோரிக்கைகளை முன் வைக்க விரும்புகிறோம். கட்டண சேனல்கள் நீங்கலாக டிராய் பரிந்துரைத்துள்ள மாதக் கட்டணம் ரூ. 77 வசூலிக்க அரசு ஆவண செய்து தர வேண்டுகிறோம். பராமரிப்பு செலவு, பணியாளர்கள் சம்பளம் மற்றும் இத்தியாதிய செலவுகளுக்கு உட்பட முதல் எழு என்ற எழுபது ரூபாய்களை கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களுக்கும், அடுத்த 7 ரூபாய் அரசுக்குமாக நிர்ணயம் செய்து தர வேண்டுகிறோம்.
சுமார் 1.45 கோடி இணைப்புகள் உள்ளதாக அரசு தரும் தகவல் மூலம் நாங்கள் வேண்டுகின்ற கோரிக்கை ஏற்கப்படுமானால் அரசுக்கு மாதம் ரூ. 10 கோடிக்கு மேல் வருமானம் வர வாய்ப்புள்ளது.
கட்டண சேனல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற எங்கள் நீண்ட கால கோரிக்கை புதிய பரிமாணம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கேபிள் டி.வி. தொழிலை அழிக்க டி.டி.எச். தொழில் நுட்பம் பயன் படுத்தப்பட திட்டம் வகுக்கப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.
கேபிள் டி.வி. இன்றைக்கு அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. டி.டி.எச். என்பது ஆடம்பர பொருளாக உள்ளது. ஆடம்பர பொருளான டி.டி.எச்.க்கு மாகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போடப்படுவது போல கேளிக்கை வரி விதிக்க வேண்டும் என்று அரசை வேண்டுகிறோம்.
டி.டி.எச். தொழிலுக்கு போட்டியாக விளங்கும் உள்ளூர் சேனல்களை நடத்தி வந்த கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களுக்கு மீண்டும் தொழில் தொடர முன்னுரிமை வழங்க வேண்டுகிறோம். அரசு நிறுவனமான எல்காட் மூலம் கேபிள் டி.வி. உபகரணங்களை மானிய விலையில் கேபிள் டி.வி. தொழில் புரிவோருக்கு வழங்க வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications