லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் செயலாளர் வீடுகளில் சிபிஐ திடீர் ரெய்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் செயலாளரான ஏ.பி.பாதக்கின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தது தொடர்பான புகாரின் பேரில் இந்த சோதனை நடந்தது. டெல்லி மற்றும் லக்னோவில் உள்ள பாதக்கின் வீடுகள் சோதனைக்குள்ளாகின.
6 மாதத்திற்கு முன்புதான் இவர் மீரா குமாரின் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் முறைகேடான வழிகளில் பெருமளவில் சொத்துக்கள் சேர்த்ததாக இவர் மீது சரமாரியாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து விசாரணை நடத்துமாறு சிபிஐயை ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டது. அதன் பேரில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications