உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிப்போருக்கு தே.மு.தி.க., தி.மு.க., வரவேற்பு
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட விரும்போர், வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்குமாறு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்பும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் விருப்ப மனுக்கள் 4ம் தேதி காலை 11 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
இந்த விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து 12ம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் தலைமை கழகத்தில் வழங்கப்படும்.
மாநகராட்சி மேயர் பதவிக்கு 15 ஆயிரம் ரூபாய், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நகராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரம், நகராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரம் ரூபாய், பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 2,500 ரூபாய், பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 500 ரூபாய், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாய், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக செலுத்தவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., பொது செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தி.மு.க.வினர் மாவட்ட கழகத்திடம் இருந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் முழு விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். மாவட்ட கழக அலுவலகத்தில் படிவம் பெற இயலாதவர்கள், முரசொலி நாளிதழில் வெளிவந்துள்ளபடி விண்ணப்பப் படிவத்தை தயாரித்து, மாவட்ட கழகத்தில் கொடுக்க வேண்டும்.
மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 20 ஆயிரம் ரூபாயும், மாநகராட்சி மன்ற உறுப்பினர் 5 ஆயிரம் ரூபாயும், நகர மன்றத் தலைவர் 10 ஆயிரம் ரூபாயும், நகர மன்ற உறுப்பினர் 2 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி மன்ற உறுப்பினர் 500 ரூபாயும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 5,000 ரூபாயும்,, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் 1,000 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கான தொகுதியில் போட்டியிட விரும்புகிறவர்கள் இந்த கட்டணத்தில் பாதித் தொகையை செலுத்தினால் போதுமானது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட செயலாளர் அல்லது பொறுப்பாளரிடம் அல்லது தலைமைக் கழகத்தில் செப்டம்பர் 5 முதல் 12ம் தேதிக்குள் உரிய கட்டணத்துடன் அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications