ஊழல்களை மறைக்க காங்கிரஸ் முயற்சி: ஜி.ராம கிருஷ்ணன் குற்றச்சாட்டு

மக்கள் பிரச்சனை, சமூக மாற்றம் போன்றவற்றிக்கு போராடி வந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா பென்னாகரம் சமுதாய கூடத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் பேசியதாவது,
கடந்த 2009ம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல் 2 ஆண்டிலேயே மக்களுக்கு முன்பாக அம்பலப்பட்டு நிற்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சி அந்த ஊழல்களை மறைக்க முயன்று வருகிறது.
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் ஸ்பெக்ட்ரம் ஊழல் ராசா உள்ளிட்டடோர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கனிம ஏற்றுமதியில் 22 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது ஆனால், மாநில பா.ஜ.க., அரசோ ஊழலை ஒழிக்க நாங்கள் தான் மாற்று என்று மக்களிடையே கொண்டு செல்ல முயன்று வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கடந்த ஜூன் 22ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்தி்தது. தமிழகத்தின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான வளர்ச்சி குறித்து மனுவை அளித்துள்ளனர். மக்கள் பிரச்சனைக்காகவும் மக்கள் நலனுக்காகவும் சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும், என்றார்.












Click it and Unblock the Notifications