நில மோசடி புகார்- அடுத்த விக்கெட் சுரேஷ்ராஜன்!
நாகர்கோவில்: நில மோசடி வழக்குத் தொடர்பாக, தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிய வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்ட திமுக பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் அஜிதா மனோ தங்கராஜ். இவருக்கு சொந்தமான, பத்தரை ஏக்கர் நிலத்தை நாகர்கோவிலைச் சேர்ந்த தயாபாக்ய சிங் வாங்கினார்.
இதில் ஒரு பகுதி, தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் வருவதால் வனத்துறையினர் தடையில்லா சான்றிதழ் வாங்கி தருவதாக, அஜிதா கூறியதால், முதற்கட்டமாக, மூன்று ஏக்கர் ஒன்பது சென்ட் நிலம், பவர் எழுதி வாங்கப்பட்டது.
மீதமுள்ள நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் இல்லாமல், பணம் கேட்ட போது, தயாபாக்யசிங் கொடுக்க மறுத்தார்.
இதைத் தொடர்ந்து அப்போதைய அமைச்சர் சுரேஷ் ராஜனும், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா-வும் சேர்ந்து மிரட்டியதாகவும், பின்பு போலியாக ஆவணம் தயாரித்து சரவணபிரசாத் என்பவருக்கு அந்த நிலத்தை விற்றதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்து மனுதாரர் நீதி மன்றத்தில் னு தாக்கல் செய்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யநாகர்கோவில் இரண்டாவது ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அஜிதா, ஷா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, விரைவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications