நில மோசடி புகார்- அடுத்த விக்கெட் சுரேஷ்ராஜன்!
நாகர்கோவில்: நில மோசடி வழக்குத் தொடர்பாக, தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என தெரிய வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்ட திமுக பஞ்சாயத்துத் தலைவராக இருப்பவர் அஜிதா மனோ தங்கராஜ். இவருக்கு சொந்தமான, பத்தரை ஏக்கர் நிலத்தை நாகர்கோவிலைச் சேர்ந்த தயாபாக்ய சிங் வாங்கினார்.
இதில் ஒரு பகுதி, தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் வருவதால் வனத்துறையினர் தடையில்லா சான்றிதழ் வாங்கி தருவதாக, அஜிதா கூறியதால், முதற்கட்டமாக, மூன்று ஏக்கர் ஒன்பது சென்ட் நிலம், பவர் எழுதி வாங்கப்பட்டது.
மீதமுள்ள நிலத்துக்கு தடையில்லா சான்றிதழ் இல்லாமல், பணம் கேட்ட போது, தயாபாக்யசிங் கொடுக்க மறுத்தார்.
இதைத் தொடர்ந்து அப்போதைய அமைச்சர் சுரேஷ் ராஜனும், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ஜி.எம்.ஷா-வும் சேர்ந்து மிரட்டியதாகவும், பின்பு போலியாக ஆவணம் தயாரித்து சரவணபிரசாத் என்பவருக்கு அந்த நிலத்தை விற்றதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இது குறித்து மனுதாரர் நீதி மன்றத்தில் னு தாக்கல் செய்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யநாகர்கோவில் இரண்டாவது ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், அஜிதா, ஷா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, விரைவில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications