உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. சார்பாக போட்டியிட 10ம் தேதி முதல் விருப்ப மனு!- வைகோ
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவதாக வைகோ அறிவித்துள்ளார். மேலும் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் 7-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் 7-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை விண்ணப்பங்களைத் தலைமைக் கழகத்திலும், அந்தந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் மாநகராட்சி மேயர் ரூ.10 ஆயிரம், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரூ.3,000, நகர்மன்றத் தலைவர் ரூ.3,000, நகர்மன்ற உறுப்பினர் ரூ.2,000, பேரூராட்சி மன்றத் தலைவர் ரூ.2,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரூ.500, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ரூ.3,000, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ரூ.2,000.
10-ந் தேதி முதல்
சென்னை மாநகராட்சி மேயர், மாமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் உரிய கட்டணத்துடன் சென்னை தாயகத்திலும், மற்ற பதவிகளுக்கு அந்தந்த மாவட்ட அலுவலகம், மாவட்ட செயலாளரால் ஏற்பாடு செய்யப்படும் இடத்திலும் 10-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் சேர்த்து விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications