சமூக நல வாரியத் தலைவராக நடிகை சி.ஆர்.சரஸ்வதி - தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
மதுரை : சினிமா நடிகையும், அதிமுக பேச்சாளருமானசி.ஆர். சரஸ்வதி சமூக நல வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவு:
தமிழக அரசின் சமூக நல வாரியத் தலைவராக சி.ஆர்.சரஸ்வதி நியமிக்கப்பட்டுள்ளார்.ஆகஸ்ட் 31 ம் தேதியில் இருந்து, மூன்று ஆண்டுகள் வரை, இந்தப் பதவியில் சி.ஆர்.சரஸ்வதி தொடர்வார்.
சமூக நல வாரியத்தின் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்கள் நியமனம் குறித்து விரைவில் தனியாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
நடிகை சரஸ்வதி பல்வேறு படங்களில் வில்லி, அம்மா வேடங்களில் நடித்துள்ளார். பாக்யராஜ் மூலம் நடிகையானவர். அதிமுகவில் தலைமைக் கழக பேச்சாளராக அவர் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications