ரவுடிகளைப் போல குண்டர் சட்டத்தில் எங்களை கைது செய்கிறது அதிமுக அரசு-ஜனாதிபதியிடம் திமுக புகார்

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பிக்கள் இன்று பிற்பகல் குடியரசுத் தலைவரை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து இந்தப் புகார் மனுவை அளித்தனர்.
குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுகவினர் மீது அதிமுக ஆட்சி வேண்டும் என்றே பொய் வழக்குகளைப் போட்டு வருகிறது. நில அபகரிப்பு என்ற பெயரில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்கிறது அதிமுக அரசு.
இதுவரை 90 திமுக நிர்வாகிகளை பொய் வழக்கின் கைது செய்துள்ளது அதிமுக அரசு.
உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் அதில் திமுகவினர் பணியாற்ற விடாமல் தடுப்பதற்காகவே இந்த வழக்குகளைப் போட்டு கைது செய்து வருகின்றனர். பல முன்னாள் அமைச்சர்களை அதிமுக அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுகவினர் மேற்கொண்ட நில அபகரிப்பு விவகாரங்களை கிடப்பில் போட்டுள்ளது அதிமுக அரசு.
ரவுடிகள் மீது ஏவப்படும் குண்டர் சட்டத்தின் கீழ் திமுகவினரை கைது செய்கிறார்கள். முழுமையான மனித உரிமை மீறலில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பிரதமருடன் ஆலோசிப்பதாக குடியரசுத் தலைவர் உறுதி
திமுக எம்.பிக்களின் மனுவைப் பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதாக தெரிவித்ததாக பின்னர் திருச்சி சிவா எம்.பி. செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications