மன்னர் குடும்பம் மீது அச்சுதானந்தனுக்கு விரோதம்: ரமேஷ் சென்னிதலா
திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் மீது அச்சுதானந்தனுக்கு விரோதம் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் பல கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் இருந்தன. இந்த நகைகளில் சிலவற்றை கோவிலை நிர்வகித்து வந்த மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா சாமி கும்பிட்டு விட்டு திரும்பும்போது எடுத்து செல்லும் பிரசாத வாளியில் வைத்து திருடிச் சென்றதாக கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் புகார் கூறியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அச்சுதானந்தன் இந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தவில்லை. மாறாக தான் கூறியது உண்மை என்றும், இதுபற்றி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தன்னிடம் புகார் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான உம்மன் சாண்டியும் எதிர்ப்பு தெரிவித்தார். மன்னர் குடும்பம் பற்றி அச்சுதானந்தன் இப்படி பேசியிருக்கத் தேவையில்லை என்றும் கூறினார். இந்த நிலையில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் அச்சுதானந்தனை கண்டித்து பேசினார். திருவனந்தபுரத்தில் நடந்த பத்மநாப சுவாமி கோவில் ஊழியர் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
இந்தியாவில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை மலர செய்தது காங்கிரஸ். இதற்காக மன்னர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் அவமரியாதை செய்ததில்லை. கேரளாவில் பத்மநாப சுவாமி கோவில் நகைகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கூறியது தவறு. அவருக்கு மன்னர் குடும்பத்தினர் மீது இருந்த விரோதமே இப்படி பேச வைத்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இப்படி யாரையும் குற்றம் சொல்லக் கூடாது என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications