மன்னர் குடும்பம் மீது அச்சுதானந்தனுக்கு விரோதம்: ரமேஷ் சென்னிதலா
திருவனந்தபுரம்: திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் மீது அச்சுதானந்தனுக்கு விரோதம் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய அறைகளில் பல கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் இருந்தன. இந்த நகைகளில் சிலவற்றை கோவிலை நிர்வகித்து வந்த மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா சாமி கும்பிட்டு விட்டு திரும்பும்போது எடுத்து செல்லும் பிரசாத வாளியில் வைத்து திருடிச் சென்றதாக கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் புகார் கூறியிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அச்சுதானந்தன் இந்த எதிர்ப்புகளை பொருட்படுத்தவில்லை. மாறாக தான் கூறியது உண்மை என்றும், இதுபற்றி கோவில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் தன்னிடம் புகார் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான உம்மன் சாண்டியும் எதிர்ப்பு தெரிவித்தார். மன்னர் குடும்பம் பற்றி அச்சுதானந்தன் இப்படி பேசியிருக்கத் தேவையில்லை என்றும் கூறினார். இந்த நிலையில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் அச்சுதானந்தனை கண்டித்து பேசினார். திருவனந்தபுரத்தில் நடந்த பத்மநாப சுவாமி கோவில் ஊழியர் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,
இந்தியாவில் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை மலர செய்தது காங்கிரஸ். இதற்காக மன்னர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் அவமரியாதை செய்ததில்லை. கேரளாவில் பத்மநாப சுவாமி கோவில் நகைகள் குறித்து எதிர்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் கூறியது தவறு. அவருக்கு மன்னர் குடும்பத்தினர் மீது இருந்த விரோதமே இப்படி பேச வைத்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இப்படி யாரையும் குற்றம் சொல்லக் கூடாது என்றார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications