டெல்லி உள்ளிட்ட நாட்டின் பெருநகரங்களில் உஷார் நிலை- தீவிர கண்காணிப்பு
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கியப் பெருநகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரக் கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கான பாதுகாப்பு பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. செங்கோட்டை, இந்தியா கேட் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்டவற்றுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய மார்க்கெட்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லிக்குள் நுழையும், வெளியேறும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையிலும்:
இதேபோல மும்பை, சென்னை, பெங்களூர், அகமதாபாத், ஹைதராபாத், புனே, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications