குண்டு வெடிப்பை நடத்தியது நாங்கள் தான்: 'ஹூஜி' தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இது தொடர்பாக அந்த தீவிரவாத இயக்கத்திடமிருந்து இ-மெயில் வந்துள்ளது. [email protected] என்ற ஐடியிலிருந்து வந்துள்ள அந்த மெயிலில், இந்தத் தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவின் எல்லா முக்கிய நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் தாக்குவோம் என்று கூறப்பட்டுள்ளது.
(சமீபத்தில் ராஜிவ் கொலை விவகாரத்தில் தூக்கு தண்டனை பெற்ற மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
இந்த மெயில் வந்துள்ளதை மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ (National Investigation Agency) உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இது குறித்து முழுமையாக விசாரித்த பின்னரே ஹூஜிக்கு இதில் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று என்ஐஏ டைரக்டர் ஜெனரல் சின்ஹா கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் ஹூஜி அமைப்புக்கு தொடர்பு இருந்தது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
26/11 மும்பை தாக்குதலில் கொலாபாவில் உள்ள சபத் ஹவுஸ் மையத்தில் தாக்குதல் நடத்தியது இந்த அமைப்பு தான்.
இந் நிலையில் டெல்லி குண்டுவெடிப்புக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு வங்கதேசம், பாகிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசம் சென்றுள்ள நிலையில் டெல்லியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் ஹூஜி அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications