செக்ஸ் புகார் எதிரொலி: வள்ளியூர் காப்பகத்தை மூட அரசு உத்தரவு
வள்ளியூர்: மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்துவதாக எழுந்த புகார்களை அடுத்து வள்ளியூர் அருகே சின்னம்மாள்புரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ராபின்சன். பாதிரியாரான அவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரத்தில் கிரேயல் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் காப்பகம் நடத்தி வருகிறார். அவர் பல்வேறு மோசடிகள் செய்து வருவதாக இங்கிலாந்தில் உள்ள குழந்தைகள் நல பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினர் அவரை கண்காணித்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக கண்காணிக்கப்பட்டு வந்த ராபின்சன் குறித்து இங்கிலாந்தில் உள்ள குழந்தைகள் நலபாதுகாப்பு குழுவுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அதில் காப்பகத்தில் மாணவர்களுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததும், மாணவர்கள் சிலரை போலியான பெயரில் ஆவணங்கள் தயாரித்து இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைத்ததும், ஒரு மாணவனை சட்டப்பூர்வமாக தத்து எடுத்துள்ளதும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ராபின்சன் மீது போலீசில் புகார் கொடுக்குமாறு இங்கிலாந்து குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகிகள் இங்குள்ள பிரதிநிதி ராக்சுகுரனுக்கு அறிவுறுத்தினர்.
அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ராபின்சன் மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி இணங்க வைத்துள்ளதும், சில வெளிநாட்டு நபர்கள் காப்பகத்தில் தங்கியிருந்த போது அவர்களுடனும் ஓரினச் சேர்க்கைக்கு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மாவட்ட சமூக நல அதிகாரி உமாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் காப்பகத்தை ஆய்வு செய்து, அதை மூட உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications