தூக்கியெறியப்பட்ட யாஹூ சிஇஓ கரோல் பட்ஸ்... பங்குகள் விலை 'ஜிவ்'!

யாஹூவின் தலைவர் பஸ்டாக் போனில் கடுமையாகத் திட்டி, கரோல் பட்ஸை நீக்கியுள்ளார். இதன் விளைவாக இதுவரை வீழ்ச்சிப் போக்கிலிருந்த யாஹூவின் பங்குகள் கிடுகிடுவென உயர ஆரம்பித்துள்ளன.
2009-ம் ஆண்டு மிக நெருக்கடியான காலகட்டத்தில் யாஹுவின் சிஇஓவாக பதவி ஏற்றார் கரோல் பட்ஸ். ஆனால் அவரால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியவில்லை.
படிப்படியாக இணைய உலகில் தனது செல்வாக்கை இழந்த யாஹூ, கடந்த நிதியாண்டில் விளம்பர வருவாயில் கணிசமான இழப்பைச் சந்தித்தது.
இது யாஹூவின் பங்குகள் விலையை சரிவுக்குள்ளாக்கியது. இதனால் கரோல் பட்ஸ் மீது யாஹூவின் இயக்குநர் குழு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் வெளியிட்டது.
இந்த நிலையில், யாஹூவின் தலைவர் ராய் பஸ்டோக், கரோல் பட்ஸை போனில் கடுமையாகப் பேசியுள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள், அதற்கு துணை நிற்க நல்ல டீம் என அனைத்துமிருந்தும் சரியாக பயன்படுத்தாமல் போனதாக அவர் காய்ச்சி எடுத்தாராம்.
இதன் விளைவாக, யாஹூ இயக்குநர் குழு கூடி, உடனடியாக கரோல் பட்ஸை பதவி நீக்கம் செய்துவிட்டது. இடைக்கால சிஇஓவாக டிம் மோர்ஸ் நியமிக்கப்படுவதாகவும், புதிய நிரந்தர சிஇஓ வரும் வரை அவர் இப் பதவியில் இருப்பார் என்றும் யாஹூ அறிவித்துள்ளது.
இந்த பதவி நீக்கம் குறித்து யாஹூ ஊழியர்களுக்கு கரோல் பட்ஸ் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "யாஹூ தலைவர் சற்று முன்னர்தான் என்னை போனில் கடுமையாக கடிந்து கொண்டார். இத்துடன் யாஹூவிலிருந்து விடைபெறுகிறேன். அனைவருக்கும் வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்" என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.
செயல் தலைமை கவுன்சில்
கரோல் பட்ஸின் நீக்கத்தைத் தொடர்ந்து, யாஹூவின் அதிவேக வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் படி, டிம் மோர்ஸின் அன்றாட பணிகளில் அவருக்கு உறுதுணையாக இருக்க செயல் தலைமை கவுன்சில் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் யாஹூ செயல் துணைத் தலைவர் உள்பட 6 முக்கிய அதிகாரிகள் அடங்குவர். நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்த நடவடிக்கைகளில் இந்த கவுன்சில் பிரதான அங்கம் வகிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் முழு நேர சிஇஓ பதவிக்கு பொருத்தமான நபரைத் தேடும் பணியில் மும்முரமாகிவிட்டது யாஹூ!
பங்குகள் விலை உயர்வு
கரோல் பட்ஸின் நீக்கம் முதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நாஸ்டாக்கில் இதுவரை 12.91 டாலராக இருந்த யாஹூ பங்கு விலை, இன்று ஒரே நாளில் ஒரு டாலர் வரை உயர்ந்து 13.72 ஆக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications