தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை முதல்வர் திரும்ப பெற வேண்டும்: யுவராஜா

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு ஆதரவாக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜெயலலிதா திரும்ப பெற வேண்டும் என, தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் யுவராஜ் கூறியதாவது, விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட, 9,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இளைஞர் காங்கிரஸ் போட்டியிட, 50 சதவீதம் இடம் ஒதுக்குமாறு, அகில இந்திய தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை, கொலையாளியாக தான் பார்க்க வேண்டுமே தவிர, அவர்களை வேறு கோணத்தில் பார்க்க கூடாது. அவர்களுக்கு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என, சில சுயநல அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால், அவர்கள் 3 பேரையும் உடனே தூக்கிலிட வேண்டும் என்பது எங்கள் கேரிக்கை.

ராஜிவ்காந்தி கொலையின் போது, 13 அப்பாவி தமிழர்கள் இறந்தனர். 2 பேரையும் தூக்கிலிடக் கோரி, இந்த 13 பேர் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். இவர்களுக்கு இளைஞர் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும்.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரும், சட்டசபை தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில், கூட்டணி இல்லாமல், தனித்து போட்டியிட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைமையை வலியுறுத்தியுள்ளோம், என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+