தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறைகின்றன: இந்திய தொழில் கூட்டமைப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வது குறைந்து கொண்டே செல்வதாக, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்ட தலைவர் அசோக் கூறியுள்ளார்.

மதுரையில் நடந்து கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் அசோக் கூறியதாவது, இந்தியாவில் தொழில் முதலீடு .8 சதவீதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 20 பில்லியன் டாலர் அளவு மட்டுமே முதலீடு உள்ளது.

இது மிகவும் குறைவு. முதலீடு குறைவதற்கு, திறமையான பணியாளர்களின் பற்றாகுறையே முக்கிய காரணம். இ-கவர்னன்ஸ் முறையை கொண்டு வந்ததால், அரசு நிர்வாகம் மேலும் எளிமைப்படுத்த முடியும்.

மருத்துவ சுற்றுலா, ஆட்டோமொபைல்ஸ், ஏரோநாட்டிக்கல்ஸ், சூரியொளி ஆற்றல் ஆகியவற்றில் கிளஸ்டர் அமைத்தால், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். இதற்கான முயற்சிகளில் சி.ஐ.ஐ., ஈடுபட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சிக்காக, அடுத்தாண்டு ஜனவரி மாதம் மதுரை விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திறமையான பணியாளர்களை ஏற்படுத்த, 15 ஆயிரம் தாழ்த்தப்பட்டோருக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்காக தமிழக அரசு, நபார்டு வங்கியுடன் இணைந்து மையம் உருவாக்க முடிவு செய்துள்ளது, என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+