தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் ஆண்டு தோறும் செப்டம்பர் 11 ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரமக்குடிக்கு வந்து இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன் முதலில் அஞ்சலி செலுத்தியது. தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக அஞ்சலி செலுத்தி வருகிறோம்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்தாண்டு அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அடுத்தாண்டு இமானுவேல் சேகரன் நினைவு நாளில் அரசே விழா எடுக்க வேண்டும், என்றார்.
அவருடன் மாநில தலைவர் கோ.க.மணி, பொது செயலாளர் வடிவேல் ராவணன், கொள்கை விளக்க செயலாளர் விளனரசு, மாநில துணை பொது செயலாளர் தளபதி ராஜ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ், பரமக்குடி நகர் செயலாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications