பரமக்குடி துப்பாக்கிச் சூடு-ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணைக்கு ஜெயலலிதா உத்தரவு

சட்டசபையில் இன்று பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் எதிரொலித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டை கிட்டத்தட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா பரமக்குடி சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
அப்போது எதிர்க்கட்சிகள் ஒரே குரலில், நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின. இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் மாற்றி அறிவித்தார்.
முன்னதாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்து அமைதியான முறையில் பிரச்சினையைத் தீர்க்க் தவறிய காவல்துறையினரைக் கடுமையாக கண்டித்தனர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கடும் குரலில் கோரினர்.












Click it and Unblock the Notifications