தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரான்சில் போராட்டம்: நாளை செங்கொடிக்கு அஞ்சலி
பாரீஸ்: கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரான்சில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நேற்று பிரான்சில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.
பாரிசில் உள்ள மனித உரிமைச் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்கு தண்டனையை நிறுத்தக் கோரியும், தமிழகம் எங்கும் நடத்தப்பட்டு வரும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பிரென்சு மொழியில் தொடர் முழக்கங்கங்கள் எழுப்பப்பட்டது. இதனை மக்கள் பிரதிநிதி சிவசுப்பிரமணியம் மகிந்தன் அவர்கள் நெறிப்படுத்தினார்.
3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை விவகாரம் குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் அறிக்கையை உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் வெளியிட்டதோடு, உலகமெங்கும் உள்ள தமிழர் அமைப்புக்கள் இத்தகைய கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புலம்பெயர் தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் இந்திய மத்திய அரசுக்கு தெரியப்படுத்தும் நோக்கில், பிரான்சில் உள்ள இந்திய தூதரகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் சிவகுருநாதன் சுதர்சன் தெரிவித்தார்.
3 பேரின் தூக்கு தண்டனையை நிறுத்தும் நோக்கிலான தொடர் செயற்பாடுகளை, உரிய வழிமுறைகளை பிரான்சில் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை தமிழகத்தில் தீயினில் காவியமாகிய செல்வி. செங்கொடிக்கு வணக்கம் செலுத்தும் அஞ்சலி நிகழ்ச்சி நாளை (13-ம் தேதி) மாலை 5 மணிக்கு லாசப்பல் பகுதியில் நடக்கவிருக்கிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications