நக்சலைட் வேட்டையில் ஈடுபடுத்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை பணிக்கு அழைக்கும் சிஆர்பிஎப்

நாட்டில் அதிக இடங்களில், நக்சலைட்டுகளின் தொல்லை உள்ளது. இவர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் பணியில் பெரும்பாலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் தேவை கிட்டத்தட்ட பல மாநிலங்களிலும் தேவையாக உள்ளது. இந்நிலையில், நக்சலைட் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 70,000 வீரர்கள் தேவைப்படுகின்றனர்.
இதற்காக, 2,012 ஓய்வுப் பெற்ற ராணுவ பணியாளர்களை தங்களது படையில் இணைந்து செயல்படுமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படை அழைப்பு விடுத்துள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 71 ஆண்டு கால வரலாற்றில், முன்னாள் ராணுவத்தினரை பணியில் சேர்ப்பது இதுவே முதல் முறையாகும்.
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெ.சி.ஓ. அதிகாரிகள், என்.சி.ஓ.அதிகாரிகள் மற்றும் பலர் இடம் பெறவுள்ளனர். இந்த அழைப்பை ஏற்று சிஆர்பிஎப்பில் இணையும் முன்னாள் ராணுவத்தினருக்கு, மாதம் ரூ. 32,000 முதல் 55,000 வரை சம்பளம் அளிக்கப்படும். இந்த ஊதியம் தற்போது பணியில் உள்ளவர்களுக்கு அளிப்பதை விட அதிகமாகும்.
மேலும், அவர்களுக்கு நக்சலைட்டுகளை எதிர்க்கும் முறைகள் மற்றும் வெடிப் பொருட்களை செயலழிக்க செய்யும் முறைகள் குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். 348 ஜெ.சி.ஓ.களையும், 1,754 என்.சி.ஓ.களையும் 3 ஆண்டு கால ஒப்பந்தத்தில் பணியில் சேர்க்க சிஆர்பிஎப் திட்டமிட்டுள்ளது.
ஆட்கள் அதிகம் தேவைப்படும் பட்சத்தில், நியமிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் சி.ஆர்.பி.எப். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 6 மாதங்களில் ஓய்வுப் பெற்ற ராணுவத்தினர், மீ்ண்டும் நாட்டு பணியில் தங்களை இணைத்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications