கோவில்பட்டி அருகே கிணற்றில் லாரி கவிழ்ந்ததில் 5 பேர் காயம்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் இன்று காலை 100 அடி ஆழ பாழும் கிணற்றில் லாரி பாய்ந்தது. இதில் லாரி டிரைவர் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் 4 பேர் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தத்தில் வீடுகட்டும் பணி நடந்து வருகிறது. இதற்குத் தேவையான ஜல்லி கற்களை கொட்டிவிட்டு லாரி ஒன்று இன்று காலை 12 மணி அளவில் திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி அங்குள்ள தனியாருக்கு சொந்தமான 100 அடி ஆழ பாழும் கிணற்றில் எதிர்பாராவிதமாக கவிழ்ந்தது.
இதில் ரெட்டிபட்டியைச் சேர்ந்த மாரியப்பன், ஆவல்நத்தம் மகேஷ்வரன், மூர்த்தி, இன்னொரு மாரியப்பன் ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறி்ந்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி சிலம்பரசன், கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தி்ல் காயம் அடைந்த லாரி டிரைவர் ரெட்டிபட்டி கலைஞர் என்பவர் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசித் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications