கொள்ளையர்களால் ரயிலிலிருந்து தூக்கியெறிப்பட்டு கால்கள் இழந்த வாலிபர்

Subscribe to Oneindia Tamil

நவாடா: ரயில் கொள்ளையர்களை எதிர்த்து நின்ற வாலிபர் ஒருவரை, ஓடும் ரயிலில் இருந்து கொள்ளையர்கள் வெளியே தூக்கியெறிந்ததில் அந்த வாலிபர் தன் கால்களை இழந்தார்.

பீகார் மாநிலம், பக்தியாபூர் இருந்து கயா என்ற இடத்திற்கு செல்லும் ரயிலில் ஆயிரக்கணக்கானோர் பயணித்தனர். இந்த இரவு 9 மணியளவில், சார்ஸோ என்ற ரயில் நிலையத்தை நெருங்கிய போது, ரயிலில் இருந்த 12க்கும் மேற்பட்டோர் கொண்ட கொள்ளை கும்பல், பயணிகளிடம் கத்தி காட்டி நகை மற்றும் பணம் கேட்டு மிரட்டினர்.

இதை பார்த்த விஜய் சிங் என்ற வாலிபர் ரயில், மக்பாத்பூர் என்ற இடத்தில் ரயில் நின்ற போது உதவி பெறும் எண்ணத்தில் கத்தினார். ஆனால், அந்த பகுதியில் எந்த போலீசாரும் இல்லாததால், அவரது முயற்சி வீணானது.

விஜய் தொடர்ந்த கொள்ளையர்களை எதிர்த்து நின்றதால், அவரை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கியேறினர். அப்போது, அருகில் உள்ள தண்டவாளத்தில் மற்றொரு ரயிலில் விஜய்யின் கால் மீது ஏறி சென்றது.

இதில் அவரது கால்கள் துண்டானது. தகவல் அறிந்த அப்பகுதியினர் அவரை மீட்கப்பட்டு பாட்னா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகையுடன் கொள்ளையர்கள் தப்பியோடிவி்ட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சம்பவம் நடந்த ராஜ்கீர்-திலையா இடைப்பட்ட பகுதியில் எந்த போலீஸ் நிலையமும் இல்லை. இதனால், சம்பவத்தை தடுக்க முடியாமல் போனது. இதனால், இந்த இடைப்பட்ட இடங்களில் செல்லும் போது, பல பயணிகளும் பயண சீட்டு கூட எடுக்காமல் பயணிப்பது உண்டு. கொள்ளையர்களை குறித்து விசாரித்து வருகிறோம், என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+