கடாபி லிபியாவில் தான் உள்ளார்: சண்டைக்கு படைதிரட்டுகிறார்

லிபியா கடாஃபியின் கையைவிட்டுப் போனவுடன் அவரது குடும்பத்தினர் நாட்டை வி்ட்டு வெளியேறியுள்ளனர். கடாஃபியும் நாட்டை விட்டே ஓடிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் லிபியாவில் தான் இருப்பதாகவும், சண்டைக்கு படைத் திரட்டி வருவதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் மூசா இபுராகிம் சாட்டிலைட் போன் மூலம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் தலைவர் நலமாக உள்ளார். அவர் லிபியாவில் தான் இருக்கிறார். உலகம் எதிர்பார்க்காத அளவுக்கு இந்த சண்டை இருக்கும். நாங்கள் இன்னும் சக்திவாய்ந்தவர்களாகத்தான் இருக்கிறோம். லிபியாவில் பெரும் பகுதி இன்னும் எங்கள் ஆதிக்கத்தில் தான் உள்ளது. நாங்கள் படைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம்," என்றார்.
ஆனால் அவர் எங்கிருந்து பேசுகிறார் என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். கடாஃபி நலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கடாஃபியின் மகன் அல் சாதி ஆப்பிரிக்க நாடான நைஜர் தலைநகரில் தஞ்சம் அடைந்துள்ளார். முன்னதாக கடாஃபியின் மனைவி, மகள், 2 மகன்கள் அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications