திமுகவுடன் விரிசலோ, மனக்கசப்போ இல்லை: திருமாவளவன்
சென்னை: திமுகவுடன் எந்தவித விரிசலோ, மனக்கசபப்போ இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
திமுகவுடன் எந்த விரிசலும் இல்லை, மனக்கசப்பும் இல்லை. இன்னும் திமுக கூட்டணியில் தான் உள்ளோம்.
உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினர். எங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். மாநில செயற்குழுவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும். திருச்சி இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது.
நாங்கள், பாமகவுடன் சேர்ந்து திருச்சியில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். இடைத்தேர்தல் காரணமாக அதை தள்ளிவைத்துள்ளோம்.
பாமக கூட்டணி குறித்து முடிவு செய்ய வரும் 17-ம் தேதி நடப்பதாக இருந்த மாநில செயற்குழு கூட்டம் தள்ளி வைக்கப்படுகிறது என்றார்.
அப்போது வன்னியரசு, பாவலன், சங்கத்தமிழன், சேகுவேரா, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் அவருடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications