நெல்லையில் சசண்டையை விலக்கச் சென்ற லாரி டிரைவர் அடித்துக் கொலை: 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

வள்ளியூர்: நெல்லையில் சண்டை போட்டவர்களை விலக்கிவிடச் சென்ற லாரி டிரைவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார்.

நெல்லை தச்சநல்லூரைச் சேர்நதவர் கோமதிநாயகம். அவர் பணகுடி ரோஸ்மியாபுரத்தில் தங்கி இருந்து ரமேஷ் என்பவரிடம் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை லாரியில் லோடு ஏற்றுவதற்காக கோமதிநாயகம் ரோஸ்மியாபுரம் மெயின்ரோட்டில் லாரியுடன் காத்திருந்தார். அப்போது லாரி உரி்மையாளர் ரமேஷுக்கும், அவரது சகோதரி கலையரசிக்கும் சொத்து பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கலையரசிக்கு ஆதரவாக அவரது கணவர் ஜெயபாண்டி, மகன் பிரதாப் சிங் ஆகியோர் சென்று ரமேஷை சரமாரியாக அடித்து உதைத்தார்கள்.

இதனால் பதறிப்போன டிரைவர் கோமதிநாயகம் சண்டை போடாதீங்க, பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சண்டையை விலக்கிவிட்டார். அப்போது எதிர் தரப்பினர் சமரசம் செய்த கோமதிநாயகத்தின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்தனர். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த அவரை உடனடியாக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கோமதிநாயகம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ரமேஷ் பணகுடி போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி ஜெயபாண்டி, பிரதாப் சிங் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+