வியட்நாம் அருகே கடலில் எரிவாயு தோண்ட இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு!

தனது கடலோரப் பகுதியில், தனது கடல் எல்லைக்குள் 2 இடங்களில் எரிவாயுவை தோண்டியெடுக்க இந்திய நிறுவனமான ஓ.என்.ஜி.சிக்கு வியட்நாம் அனுமதி அளித்துள்ளது.
இதற்கான பணிகளை ஓ.என்.ஜி.சியின் வெளிநாட்டுப் பிரிவான ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிகம் அமைப்பு தொடங்கவுள்ளது.
இந் நிலையில் சீன வெளியுறவுத்துறையிடமிருந்து மத்திய அரசுக்கு வந்துள்ள கடிதத்தில், எங்களிடம் அனுமதி பெறாமல் தென் சீனக் கடலில் ஓ.என்.ஜி.சி எரிவாயுவை தோண்டுவது சட்ட விரோதமானது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்துக்கு சீன தூதரகம் மூலமாக இந்திய வெளியுறவுத்துறை சீன அரசுக்கு பதில் அனுப்பியுள்ளது. அதில், நாங்கள் எரிவாயுவைத் தோண்டுவது வியட்நாமின் கடல் எல்லைக்குள், அந்த நாட்டின் அனுமதியுடன் தான். இதற்கு உங்களிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. இதில் எந்த சட்ட விதியும் மீறப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
வரும் 16ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியட்நாம் செல்ல உள்ள நிலையை இந்தப் பிரச்சனையைக் கிளப்பியுள்ளது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.
தென் சீனக் கடலின் 127, 128வது பிளாக்குகளில் தான் ஓ.என்.ஜி.சி. எரிவாயுவை தோண்டியெடுக்க உள்ளது. ஐ.நா. சபையின் கடல் எல்லை ஒப்பந்தப்படி இந்தப் பகுதி வியட்நாமைத் தான் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிழக்கு ஆசியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளில் வியட்நாமும் ஒன்று என்பதும், வியட்நாமின் பாராசல் தீவை 1974ம் ஆண்டில் சீனா ஆக்கிரமித்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர ஸ்பார்ட்லி தீவு யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவுடன் வியட்நாம் மோதி வருவதும் முக்கியமான விஷயமாகும்.
2007ம் ஆண்டு ஸ்பார்ட்லி தீவு அருகே இங்கிலாந்தின் BP நிறுவனம் எரிவாயு தோண்டியெடுக்க இருந்த நிலையில், சீனாவின் எதிர்ப்பால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications