12வது முறையாக வட்டி வீதங்களை உயர்த்தியது ரிசர்வ் வங்கி- வங்கிக் கடன்கள் காஸ்ட்லியாகும்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: நாட்டின் பொதுப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடாமல் தவிர்க்க முக்கிய வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. ரெபொ மற்றும் ரிவர்ஸ் ரெபோ விகிதங்களை 25 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

இரு தினங்களுக்கு முன் பொதுப் பணவீக்க விவரம் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி 9.78 ஆக பணவீக்கம் உயர்ந்தது. இந்த மாதம் நிச்சயம் இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிடும் என நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, பணவீக்க நடவடிக்கையை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து மேற்கொள்ளும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.

அதன்படி முதல் நடவடிக்கையாக முக்கிய வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது. ரெபோ எனப்படும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடனுக்கான வட்டியை 25 புள்ளிகளும், ரிவர்ஸ் ரெபோ எனப்படும் வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய முதலீட்டுக்கான வட்டியையும் 25 புள்ளிகளும் உயர்த்தியுள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்துவது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இது 12 வது முறையாகும்.

இதன் மூலம் பல்வேறு வகை கடன்களுக்கான வட்டிகளை உடனடியாக உயர்த்த ஆரம்பித்துள்ளன வணிக வங்கிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+