10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: 6 பேர் பெண்கள்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடக்கிறது.
இந் நிலையில் தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் மேயர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
10ல் 6 மேயர் பதவிகளுக்கு பெண்கள்:
இதில் திருச்சி, நெல்லை,வேலூர், தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூருக்கு பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் விவரம்:
1. சென்னை - சைதை துரைசாமி
2. மதுரை - வி.வி.ராஜன் செல்லப்பா
3. திருச்சி - எம்.எஸ்.ஆர்.ஜெயா
4. சேலம் - சவுண்டப்பன்
5. கோவை - செ.ம.வேலுசாமி
6. நெல்லை - விஜிலா சத்தியானந்த்
7. வேலூர் - கார்த்தியாயிணி
8. ஈரோடு - மல்லிகா பரமசிவம்
9. திருப்பூர் - திருப்பூர் ஆர்.விசாலாட்சி
10. தூத்துக்குடி - எல்.சசிகலா புஷ்பா
சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சைதை துரைசாமி முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சைதை துரைசாமி, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இவர் நடத்தி வரும் மனித நேய அறக்கட்டளையில் மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக ஐ.ஏ.எஸ். பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் படித்த ஏராளமான மாணவ, மாணவிகள் ஐஏஎஸ் தேர்வில் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தேர்தல் தேதி அறிவிப்பு?:
இந் நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் நடைபெறும் நாளில் இருந்து 20 நாட்களுக்கு முன் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். அக்டோபர் 19ம் தேதிக்குள் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதன்படி வரும் 25ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
தமிழக அரசின் இலவச திட்டங்கள் தொடங்கப்பட்ட பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா நேற்று இலவச ஆடு, மாடு, லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டார்.
இன்று வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார். இதனால் நாளை அல்லது 19ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்.. எல்லாத்துக்குமே திமுக காரணமா.. சென்னை மேயர் பிரியா கேள்வி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications