பரமக்குடி துப்பாக்கிச் சூடு- திருமாவளவன், ஜான் பாண்டியன் ஆர்ப்பாட்டம்
சென்னை: பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. அதற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் முகமது யூசுப், வன்னி அரசு, வெற்றிச் செல்வன், சுப வீரபாண்டியன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது திருமாவளவன் பேசியதாவது,
அப்பாவி தலித் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது திட்டமிட்ட தாக்குதல் ஆகும். இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் உண்மை வெளியே வராது. எனவே, சிபிஐ தான் விசாரணை நடத்த வேண்டும்.
தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமானால் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
இதோ கோரிக்கையை முன்வைத்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மெமோரியல் ஹால் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் கட்சியின்
மாநில பொதுச்செயலாளர் முகமது சாதிக், மகளிர் அணி மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications