காலாண்டு தேர்வுக்கு பாடங்கள் குறைப்பு: பள்ளிக் கல்வித்துறை
நெல்லை: தமிழகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமத்தால் காலாண்டுத் தேர்வுக்கான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என திமுக அரசு அறிவித்தது. ஆனால் புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு சமச்சீர் கல்வியை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நடப்பு கல்வியாண்டிலேயே 1 முதல் 10-ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தான் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டு பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.
அதிலும் சில தனியார் பள்ளிகளுக்கு இன்னும் போதிய பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை.
சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டதால் பள்ளி நாட்களை ஈடுகட்ட ஒரு மாதத்திற்கு இரண்டு சனிக்கிழமை வேலை நாள் எனவும், தினமும் 35 நிமிடங்கள் பள்ளி நேரத்தை அதிகரித்தும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் காலாண்டு தேர்வுக்கான பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
7 முதல் 9-ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுக்கான பாடங்கள் குறைக்கப்பட்டுள்ள சதவீதம் வருமாறு, பொதுவாக காலாண்டு தேர்வுக்கு 40 சதவீத பாடங்களும், அரையாண்டு தேர்வுக்கு 40 சதவீத பாடங்களும், எஞ்சியுள்ள 20 சதவீத பாடங்களை சேர்த்து முழு ஆண்டுத் தேர்வு நடத்தப்படும்.
ஆனால் இந்த ஆண்டு காலாண்டு தேர்வுக்கு 25 சதவீத பாடங்களும், அரையாண்டு தேர்வுக்கு 40 சதவீத பாடங்களும், முழு ஆண்டுத் தேர்வுக்கு எஞ்சியுள்ள 35 சதவீத பாடங்களும் நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications