வீட்டு வாசலில் விளையாடிய வங்கி ஊழியரி்ன் 2 வயது மகள் கடத்தல்
சென்னை: சென்னை, விருகம்பாக்கத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த வங்கி ஊழியரின் 2 வயது மகள் மாயமானதால் பரபரப்பேற்பட்டுள்ளது.
விருகம்பாக்கம், மஜீத் நகர் வி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிகிறார். அவரது மனைவி வசந்தி. அவர்களுக்கு கவிதா என்கிற 2 வயது மகள் இருக்கிறாள்.
நேற்று காலை கணேசன் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் வசந்தியும், கவிதாவும் மட்டும் இருந்துள்ளனர். மாலை நேரத்தில் கவிதா வீட்டு வாசல் முன்பு விளையாடிக் கொண்டிருக்க வசந்தி சமையல் செய்து கொண்டிருந்தார்.
சமையலை முடித்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தை கவிதாவை காணவில்லை. உடனே பதறிப்போன வசந்தி அக்கம்பக்கத்தில் எல்லாம் தேடினார். ஆனால் பலனில்லை. கணேசனுடன் ஏற்பட்ட முன்விரோதத்தால் யாராவது குழந்தையை கடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து கணேசன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் தலைமையிலான போலீசார் குழந்தையைத் தேடி வருகின்றனர்.
குழந்தையைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 98404 79998 என்ற எண்ணில் அல்லது போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications