வடமாநிலங்களில் முட்டை தேவை அதிகரிப்பதால் 5 பைசா விலை அதிகரிப்பு
நாமக்கல்: வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் முட்டை வியாபாரிகள் மற்றும் பண்ணையாளர்கள் கூடி முட்டை விலை நிர்ணயம் குறித்து ஆலோசித்தனர்.
இதுகுறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டெல்லி கொல்கத்தா, மும்பை, மீராஜ் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து விஜயவாடா, ஹைதராபாத் ஆகிய கொள்முதல் மண்டலங்களில் முட்டை விலை அதிகரித்து வருகிறது.
இந்திய முழுவதும் முட்டை தேவை அதிகரித்துள்ளதால், நாமக்கல் பண்ணை விலையிலும் முட்டைக்கு 5 பைசா உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2.52 பைசா என இருந்த முட்டை விலை 2.57 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கறிக்கோழி விலையில் 3 ரூபாய் குறைத்து 34 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பண்ணையில் இருந்து விற்கப்படும் கோழிகளுக்கு 2 ரூபாய் குறைத்து 32 ரூபாய் என விற்கலாம். அதற்கு குறைவாக எந்த பண்ணையாளரும் விற்க வேண்டாம். வட மாநிலங்களில் வரும் நாட்களில் தேவை அதிகரித்து வரும் நிலையி்ல் முட்டை விலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.












Click it and Unblock the Notifications