வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்கியது மத்திய அரசு

இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கிலோ ரூ. 25-க்கு விற்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு வெங்காய ஏற்றமதிக்கு கடந்த 9-ம் தேதி தடை வதித்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிரிப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார், உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் கே. வி. தாமஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
வெங்காய ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்தார்.
அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதித்தவுடன் டெல்லியில் வெங்காய விலை சரிந்து கிலோ ரூ. 2 முதல் 5 வரை விற்பனையானது. வெங்காயத்தை அதிக அளவில் பயிரிடும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநில விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாசிக் மற்றும் பெங்களூர் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் வெங்காயத்தை சந்தைக்கே கொண்டு வராமல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தான் மத்திய அரசு தடையை நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications