ஜாமீனில் வந்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு: சென்னையில் சிகிச்சை

சேலத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் பிரேம்நாத் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சென்னையில் தங்கி இருந்து தினமும் பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார்.
சேலம் அருகே உள்ள பூலாவரியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு கூடியிருந்த கட்சிக்காரர்களிடம் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்தும், எத்தனை பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறி்ததும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் காரில் ஏறி சென்னைக்கு கிளம்பினார். அவருடன் அவரது மகன்கள் முன்னாள் எம்.எல்.ஏ.வீரபாண்டி ராஜா, பிரபு, சேலம் மாவட்ட துணை செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், தாரைமணியன், ஏ.ஏ. ஆறுமுகம் மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.
இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெறத் தான் அவர் சென்னை சென்றுள்ளார். எனவே, தினமும் காலை பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திட முடியாது. அதனால் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிபந்தனை ஜாமீனை தளர்த்தி உத்தரவிட்டார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications