பெங்களூர் கல்யாண மண்டபத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 பேர் பலி
பெங்களூர்: பெங்களூர் திருமண மண்டபத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தில், சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இறந்தனர்.
பெங்களூர் சுமனஹல்லியில் உள்ள லக்ஷ்மி வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நேற்று மதியம் சமையலறையில் இருந்த கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்தது. இதனால் திருமண மண்டபம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
4 மாடிகளை கொண்டு திருமண மண்டபத்தில் வேகமாக பரவிய தீயை, தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் மண்டபத்தின் உள்ளே சென்றபோது, சிலிண்டர் வெடித்த அதிர்ச்சியில் நின்ற மண்டப சுவர்கள் இடிந்து விழுந்தது.
இதில் மண்டபவத்தின் அருகில் இருந்த வீடுகளின் மீது கட்டிட பாகங்கள் விழுந்து 12 பேர் காயமடைந்தனர். அதன்பின் நடத்திய மீட்பு பணியின் போது, அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கவிதா(17) என்பவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மீட்கப்பட்ட மற்றொரு உடல் எரிந்த நிலையில் உள்ளதால், யார் என்பதை கண்டறிய முடியவில்லை.
சிகிச்சை பெற்றுவரும் 12 பேரில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று திருமண மண்டபவத்தில் எந்த நிகழ்ச்சியும் நடக்காமல் இருந்ததால் பலியானோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறி்த்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications