பேஸ்புக் மெசேஜ்: தற்கொலைக்கு தூண்டியதாக ஐஐஎம் மாணவியின் காதலன் மீது வழக்குப் பதிவு
பெங்களூர்: பேஸ்புக் மெசேஜை பார்த்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெங்களூர் ஐஐஎம் மாணவியின் பாய் பிரண்ட் மீது தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி மர்மு(22). அவர் பெங்களூர் ஐஐஎம்-ல் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடைய பாய் பிரண்ட் பேஸ்புக்கில் மர்முவை பிரிவதாகவும், இதன் மூலம் தான் சுதந்திரமடைந்துவிட்டதாகவும் ஸ்டேடஸ் போட்டிருந்தாராம். இதைப் பார்த்த மர்முவுக்கு துக்கம் தாங்க முடியவில்லை. உடனே விடுதி அறையில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மாலினி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவருக்கும், அவரது பாய் பிரண்டுக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இதையடுத்து தான் அவர் பேஸ்புக்கி்ல் மாலினியைப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கில் மாலினியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது பாய் பிரண்ட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். மாலினி தற்கொலை செய்து கொண்டதையடு்தது அந்த நபர் தனது பேஸ்புக் அக்கௌண்டை டிலீட் செய்துவிட்டார்.
ஒரு திறமையான மாணவியை இழந்துவிட்டோம் என்று ஐஐஎம் தலைவர் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications