மேலும் 2 நில அபகரிப்பு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கைது

திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தலில் நேருவை திமுக களமிறக்கியுள்ள நிலையில் இந்த அடுக்கடுக்கான வழக்குகள் பாய்ந்துள்ளன.
ஏற்கனவே திருச்சியில் கலைஞர் அறிவாலயத்துக்கு இடம் வாங்கிய விவகாரம் தொடர்பாக நேரு கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பாய்ந்துள்ளன.
திருச்சி விமான நிலையத்துக்கு அருகே கொட்டப்பட்டில் நில அபகரிப்பு செய்ததாக ஒரு வழக்கும், சாத்தனூரில் நில அபகரிப்பு செய்ததாக இன்னொரு வழக்கும் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொட்டப்பட்டு வழக்கில் நேரு, அவரது தம்பி ராமஜெயம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சாத்தனூர் சாலமன் தந்த புகாரின் பேரில், அந்த வழக்கில், நேரு, ராமஜெயம் உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் நேருவைக் கைது செய்த போலீஸார் அவரை கடலூர் சிறையிலிருந்து திருச்சி கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை அக்டோபர் 4ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications