உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா?: ராமதாஸ் சந்தேகம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தேர்தல் கமிஷன் தேதியை அறிவிக்கும் முன்னரே முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்ததைப் பார்த்தால் உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக மதுரை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற செல்கிறோம். பரக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. திராவிட கட்சிகள் மீது நம்பிக்கையில்லை, அவர்களுடன் கூட்டணி கிடையாது. தேர்தல் கமிஷன் தேதியை அறிவிக்கும் முன்னர் ஜெயலலிதா வேட்பாளர்களை அறிவித்ததைப் பார்த்தால் உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட இடங்களில் பாமக கைப்பற்றும். பாமகவின் செல்வாக்கை நிருபித்து காட்டுவோம் என்றார்.

இந் நிலையில் இன்று மாலை மதுரையில் பரமக்குடி சம்பவத்தை கண்டித்து ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+