புதுவை இந்திரா நகர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பாஸ்கரன் வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil

புதுவை இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் 19ம் தேதி தொடங்கியது. ஆனால், கடந்த 2 நாட்களாக யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், நேற்று முத்திரையர்பாளையத்தில் உள்ள அஞ்சநேயர் கோவிலில் சுத்துக்கேணி பாஸ்கரன் சாமி தரிசனம் செய்தார். பின்பு தனது கட்சி நிர்வாகிகள் புடை சூழ ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவருடன் மாநில அ.தி.மு.க செயலர் அன்பழகன், தமிழக அமைச்சர்கள் அக்கிரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், செம்மலை எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஓம்சக்திசேகர், புருசோத்தமன், பெரியசாமி, பாஸ்கரன் ஆகியோர் உடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications