தெலுங்கானாவில் 48 மணி நேர ரயில் மறியல்: ரயில்கள் ரத்து
ஹைதராபாத்: தெலுங்கானா போராட்டக்குழு நாளை முதல் 2 நாட்களுக்கு ரயில் மறியல் நடத்துகின்றனர். இதையடுத்து தெலுங்கானா வழியாகச் செல்லும் முக்கிய ரயில்கள் இன்றிரவு முதல் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
தெலுங்கானா தனி மாநிலம் கோரி ஆந்திராவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு 2 நாள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து தெலுங்கானா வழியாகச் செல்லும் முக்கிய ரயில்கள் இன்றிரவு முதல் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி தெலுங்கானா வழியாகச் செல்லும் 55 எக்ஸ்பிரஸ் ரயலிகள் மற்றும் 176 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னையில் இருந்து செல்லும் ரயில்களும் அடக்கம்.












Click it and Unblock the Notifications