பாதாள சிறையி்ல் அடைத்து வைத்து 6 இளம்பெண்களை 2 ஆண்டுகளாக கற்பழித்த தீயணைப்பு வீரர்
பெய்ஜிங்: வீட்டிற்கு அடியில் அமைக்கப்பட்ட பாதாள சிறையில் 6 இளம்பெண்களை அடைத்து வைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாக அவர்களை கற்பழித்து வந்த தீயணைப்பு வீரர் போலீசாரிடம் சிக்கினார்.
சீன நாட்டின் ஹீனான் மாகாணத்தில் உள்ள லூயங் பகுதியை சேர்ந்தவர் லீ ஹாயோ(34). தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்த இவர் மனைவி மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர். இவரது வீட்டிற்கு அடியில் 1 வருடத்திற்கு மேலாக பாடுபட்டு, சுற்றுபுறத்தார் யாருக்கும் தெரியாமல் பாதாள அறை ஒன்றை உருவாக்கினார்.
தரையில் இருந்த 4 மீட்டர் ஆழத்தில், 30 சதுர மீட்டரில் உள்ள 2 அறைகளை கொண்டிருந்தது. இதற்கு 60 செ.மீ மட்டுமே அளவுள்ள குறுலான வழியை ஏற்படுத்தினர். பின்னர் தான் தனது திட்டத்தை அரங்கேற்றினார். தன்னோடு பழகும் பெண்களை மயக்கி வீட்டிற்கு கொண்டு வந்து அந்த பாதாள சிறையில் அடைத்து வைத்து கற்பழித்தார்.
இப்படி 6 பெண்களை கடத்தி வந்து அந்த அறைகளில் அடைத்து வைத்து அவ்வப்போது மாறி மாறி கற்பழித்து வந்தார். இப்படி கடந்த 2 ஆண்டுகளாக அந்த பாதாள சிறையில் கிடந்து, அந்த பெண்களின் மனநிலை பாதிக்கப்பட்டு, லீயிடம் இருந்து தப்பும் எண்ணமும் இல்லாமல் போனது. அவர்களும் லீயின் இஷ்டத்திற்கு தகுந்தவர்களாக மாறி போனார்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுக்கு 2 நாட்களுக்கு 1 முறை மட்டுமே உணவு அளித்து, அவர்கள் எப்போதும் களைப்பாக இருக்குமாறு லீ வைத்துள்ளார். இதன்மூலம் தனது பிடியில் இருந்து தப்ப முடியாதபடி பார்த்து கொண்டார்.
மேலும் தனக்கு பணம் தேவைப்படும் போது, அடைத்து வைக்கப்பட்ட பெண்களை வெளியே மற்ற இடங்களுக்கு கடத்தி சென்று விபச்சாரத்திலும் ஈடுபடுத்தி உள்ளார். விபச்சாரத்திற்காக ஒரு பெண்ணை வெளியே அனுப்பிய போது, லீயின் பிடியில் தப்பினர். வெளியே வந்து பாதாள சிறையில் தானும், தன்னுடன் அடைத்து வைக்கப்பட்ட பெண்களும் அனுபவித்த கொடுமைகளை போலீசாரிடம் கொட்டி தீர்த்துள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் லீயின் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது தான் லீயின் லீலைகளை கேள்விப்பட்ட அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தன்னை கைது செய்ய வருவதை அறிந்து வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற லீயை கைது செய்தனர்.
லீயிடம் நடத்திய விசாரணையில் 2 பெண்களின் உடல்களை டங்ஷியாங் என்ற இடத்தில் இருந்து போலீசாரிடம் தோண்டி எடுத்தனர். இவை 1 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டது தெரிந்தது. கற்பழிக்கும் போது ஏற்பட்ட சண்டையில் அந்த பெண்களை லீ கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மற்ற பெண்களை மீட்ட போலீசார் அவர்களுக்கு தகுந்த மருத்துவமனை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து லீயிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications