ஒரிசாவில் பொதுக்கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: ஒரிசாவில் பொதுக்கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஜக்பந்து மாஜ்ஹி மாவோயிஸ்ட்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலத்தில் பிஜு ஜனதாதளம் ஆட்சியில் உள்ளது. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் ஜக்பந்து மாஜ்ஹி எம்.எல்.ஏ. அவர் இன்று ராய்கர் என்னும் இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் மாவோயிஸ்ட்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் ராய்கர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பட்டப்பகலில் அதுவும் அவ்வளவு மக்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications