2 மீனவர்கள் மாயமான வழக்கில் முன்னாள் அமைச்சர் கேபிபி சாமி கைது

கடந்த 2006ம் ஆண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த செல்லத்துரை மற்றும் இன்னொரு மீனவர் மாயானார்கள். இவர்களில் செல்லத்துரை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். திமுக ஆட்சிக்காலத்தில் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கு மீண்டும் முடுக்கி விடப்பட்டது. இந்த வழக்கில், சாமியின் தம்பிகளான கே.பி.பி. சங்கர் மற்றும் கே.பி.பி.சொக்கலிங்கம் ஆகிய இருவரும் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் சில வாரங்களுக்கு முன்பு சரணடைந்தனர்.
இந்த வழக்கில் டைசன், சுந்தரம் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் கே.பி.பி.சாமியும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்தனர்.
இந்தப் பின்னணியில் இன்று காலையில் சாமியின் வீட்டின் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டனர். அவரைக் கைது செய்ய போலீஸார் குவிந்ததை அறிந்த திமுகவினர் பெருமளவில் வீடு முன்பு திரண்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களைப் போலீஸார் கலைத்து விரட்டினர்.
பின்னர் சாமியைப் போலீஸார் கைது செய்தனர். அதிமுக அரசில் கைது செய்யப்பட்டும் லேட்டஸ்ட் திமுக மாஜி அமைச்சர் சாமி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications