கேரளாவில் அதிகளவு மது அருந்தி நினைவிழந்த 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொல்லம்: கேரளாவில் அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் சாலையில் விழுந்து கிடந்த 3 பேர் இறந்த நிலையில் போலீசாரால் மீட்கப்பட்டனர்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடப்பா பகுதியை சேர்ந்த ஷாஜி (47) நேற்று காலையில் அளவிற்கு அதிகமாக குடித்துவிட்டு, அவரது வீட்டின் அருகே உள்ள சாலையில் விழுந்து கிடந்தார். அதுகுறித்து அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் மாலை வரை அசைவற்று கிடந்த ஷாஜியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பல மணிநேரத்திற்கு முன்பு, இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதேபோல ஆஞ்சிலிமூடு பவுலோஸ் (50) மற்றும் கிளிகோல்லூர் சாரீப் (40) ஆகியோரும் அதிகளவில் குடித்துவிட்டு, சலனமற்ற நிலையில் மீட்கப்பட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 2 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கொல்லம் மாவட்டத்தில் ஆங்காங்கே கள்ள சாராயம் விற்கப்படுகிறது. போலீசார் அவ்வப்போது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டாலும், சாராய விற்பனை குறைந்தபாடில்லை. இந்நிலையில் இறந்த 3 பேரும் கள்ள சாராயம் குடித்து இறந்தார்களா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

3 பேரின் உடல்களையும் பிரேத பிரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அதிகளவு மது அருத்தி இறந்ததாக வழக்கு பதிந்துள்ள போலீசார், 3 பேரின் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் குடிபோதைக்கு அடிமையானவர்கள் கேரளாவில்தான் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+