மதிமுகவுக்கு பம்பரம் சின்னம்!- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இது தொடர்பாக தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மாநிலத்தேர்தல் ஆணையத்தால் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னம் வழங்கத் தகுந்த அறிவுரைகள் ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையினை ஏற்று, இந்திய தேர்தல் ஆணையத்தால் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் வழங்கியது போன்ற சலுகையினை இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தத் தேர்தலிலும் பம்பரம் சின்னத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மாநிலத்தேர்தல் ஆணையம் வழங்கி ஆணையிட்டுள்ளது.
இதே போல் மேற்கு வங்க மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக்கட்சியான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கோரிக்கைகளையும் ஏற்று 'சிங்கம்' சின்னத்தை அக்கட்சிக்கு ஒதுக்கி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications