திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- வேட்பு மனுதாக்கல் முடிந்தது- 25 பேர் மனு தாக்கல்

செப்டம்பர் 19ம் தேதி திருச்சி இடைத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் தொடங்கியது. திமுக சார்பில் போட்டியிடும் நேருவுக்காக, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினே நேரில் வந்து மனுவைக் கொடுத்தார். அக்டோபர் 13ம் தேதி இங்கு இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இன்று மாலை 3 மணியுடன் மனுத் தாக்கல் முடிவடைந்தது. மனுத் தாக்கல் முடிவடைந்தபோது மொத்தம் 25 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் அதிமுக வேட்பாளர் மு.பரஞ்சோதி மற்றும் திமுக வேட்பாளர் கே.என்.நேரு.
இவர்கள் தவிர இந்திய தேசிய லீக் மற்றும் அகில இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 20 சுயேச்சைகளும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
நாளை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து 29ம் தேதிக்கள் மனுக்களை வாபஸ் பெறலாம். அக்டோபர் 13ம் தேதி வாக்குப் பதிவு நடந்து, வாக்குகள் 17ம் தேதி எண்ணப்படும்












Click it and Unblock the Notifications