உபி: லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை - கிராமத்தினர் சாலை மறியல்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் லஞ்சம் கொடு்க்க மறுத்த லாரி டிரைவரை போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் அடித்தே கொலை செய்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சந்தோலியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரியை மறித்துள்ளார் போக்குவரத்துத் துறை அதிகாரி ராதேஷ்யாம். லாரி டிரைவரின் ஓட்டுநர் உரிமம், லாரி ஆவணங்களை ஆகியவற்றை சரிபார்த்த அவர் லஞ்சம் தந்தால் தான் லாரியை எடுத்துச் செல்ல அனுமதிப்பேன் என்று கூறியுள்ளார். அந்த லாரி டிரைவர் ஆனந்த் லால் குப்தா லஞ்சம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷ்யாம் ஆனந்தை அடித்துக் கொலை செய்துள்ளார்.
இந்த தகவல் கிடைத்ததும் அந்த கிராம மகக்ள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசாருடனும் தகராறு செய்தனர். ஆனந்தின் கொலை குறித்து தகவல் அறிந்த லாரி டிரைவர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீசாரைத் தாக்கினர். இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.
போராட்டம் ஒரு புறம் நடக்க இதை சாக்காக வைத்து ராதேஷ்யாம் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நடந்தது என்பதை சந்தோலி எஸ்பி சலப் மாதுர் உறுதிபடுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "குற்றவாளிகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பிரேத பரிசோதனை நடத்தப்படும். அதன் பிறகு ஆனந்த் சாவுக்கான காரணம் தெரிய வரும். போராட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்," என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications