அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி முறிந்தது-உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி- தா.பாண்டிய

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடனான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி முறிந்துவிட்டதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போடியிடும் என்றும் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மேலும் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலையும் அவர் இன்று வெளியிட்டார்.

அதிமுகவில் கேட்ட இடமும் மரியாதையும் கிடைக்காததால், தனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைத்துவிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், அந்தக் கட்சியின் முக்கியமான இணைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் அதிமுகவிடம் தொடர்நது சீட் கேட்டு பேச்சு நடத்திக் கொண்டிருந்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் குழு அதிமுகவுடன் பேச்சு நடத்தி வந்தது. ஆனால் உடன்பாடு தான் ஏற்பட்டவில்லை. காரணம், 2006 உள்ளாட்சி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்ற இடங்களை ஒதுக்கக்கூட அதிமுக தலைமை மறுத்துவிட்டது. ஆனாலும் அதிமுகவுடன் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தது இந்திய கம்யூனிஸ்ட்.

இத்தனைக்கும் தேமுதிக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ்ட் மாநிலத் தலைவர்கள் பத்திரிக்கைகள் மூலம் அழைப்பும் விடுத்துப் பார்த்துவிட்டனர்.

முன்னதாக தனிப்பட்ட முறையில் இந்திய கம்யூனிஸ்டிடம் மார்க்சிஸ்ட் தலைவர்கள், தேமுதிக கூட்டணிக்குப் போகலாம் என்று கூறியும் கூட தா.பாண்டியன் அதை ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்தே, ''எங்கள் அணியில் சேருமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு காரணம் அ.தி.மு.க. தலைமையின் தவறான அணுகுமுறைதான்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் பத்திரிக்கைள் மூலம் தா.பாண்டியனுக்கு அழைப்பு விடுக்க நேர்ந்தது என்கிறார்கள்.

ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அழைப்பையும் கூட நிராகரித்துவிட்டு அதிமுகவுடன் எப்படியாவது கூட்டணி வைத்துவிடலாம் என இந்திய கம்யூனிஸ்ட் முயன்றது. இவ்வளவு தூரம் இறங்கி வந்தாலாவது அதிக சீட் தருவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் எதிர்பார்த்தது.

ஆனால், அதிமுக தருவதாகச் சொன்ன இடங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை கொதிப்படைய வைத்துவிட்டது. இதையடுத்து இன்று காலை சென்னையில் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நடந்தது.

அதில் அதிமுக கூட்டணியே கூடாது என்று பெரும்பாலானவர்கள் திட்டவட்டமாகக் கூறிவிடவே, தனித்துப் போட்டி என்ற அறிவிப்பை தா.பாண்டியன் வெளியிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+