வேலூர், கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள்: பாமக அறிவிப்பு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பில் வேலூர், கோவை, நெல்லை மாநகராட்சிகளில் மேயர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் பாமக சார்பல் போட்டியிடும் வேட்பாளர்களின் 7வது பட்டியலை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது.
வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூபாவதி மகாத்மா, நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு சண்முகப்பிரியா, கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு கே.இராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுவர்.
நகராட்சித் தலைவர்கள்:
மறைமலைநகர் - து.மூர்த்தி (முன்னாள் எம்எல்ஏ)
விருத்தாசலம் - வ.க.முருகன்
திண்டுக்கல் - சுப. கோபாலகிருஷ்ணன்
பழனி - வைரமுத்து
கோபி - அஸ்ரின் பேகம்
தாராபுரம் - ஜி.காஞ்சனா
காங்கேயம் - பி.பிரபாகரன்
நாகர்கோவில் - அமுதா கணேஷ் ஆகியோர் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications